Our Feeds


Tuesday, January 4, 2022

ShortNews

சிறையில் இருந்தவாறு உயர் கல்வி கற்பதற்கு முன்னால் MP ரஞ்சனுக்கு அனுமதி



சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு இணையம் ஊடாக உயர் கல்வியை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான கோரிக்கையை ரஞ்சன் ராமநாயக்க விடுத்திருந்ததுடன் நீதியமைச்சரின் அனுமதியுடன் அதற்கான அனுமதிக் கடிதத்தை வழங்கியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மடிக் கணனி ஊடாக இணையத்தளத்தை பயன்படுத்தி வெளிவாரி பட்டப்படிப்புக்கான விரிவுரைகளில் கலந்துகொள்ள ரஞ்சனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் அவர் படிக்கும் துறைசார்ந்த நூல்கள் உள்ளிட்டவற்றை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இணையம் ஊடாக நடத்தப்படும் விரிவுரைகளில் அவர் கலந்துகொள்வது, சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரி ஒருவரின் முன்னிலையில் நடைபெறும் எனவும் உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »