ஆணை இல்லாமல் ஆட்சியில் இருக்க அரசாங்கம் முயற்சித்தால் வீதியில் இறங்குவோம் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கம் தன்னிச்சையாக மக்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கான நடவடிக்கை தொடர்பிலான அறிக்கைகள் தொடர்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஊடாக பொதுமக்களால் ஆணை வழங்கப்படுவதாகவும், அதற்கு மக்கள் பிரதிநிதிகள் கட்டுப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு தொற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் பொருளாதார அல்லது உலகளாவிய பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலங்களை தன்னிச்சையாக நீட்டிக்க இலங்கை அரசியலமைப்பில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
எனவே, தன்னிச்சையான நடவடிக்கைகளின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது கடும் ஆட்சேபனையை தெரிவிப்பதாக அத்தநாயக்க எம்.பி மீண்டும் வலியுறுத்தினார்.