(நா.தனுஜா)
பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்குப் பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்குத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் எதிர்பார்க்கப்பட்டவாறான பெறுபேற்றைத் தராத நிலையில், அதனை முழுமையாக இல்லாதொழிப்பதுடன் அதுவரையில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
