மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியுடன் வீடொன்றுக்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில், அவ்வீட்டில் இருந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.