பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவாலய ஊழியர் உட்பட மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான வைத்தியர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.