இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ராகமயில் அமைந்துள்ள, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 6 பேர் கைதாகியிருந்த பின்னணியிலேயே அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.