Our Feeds


Wednesday, February 2, 2022

ShortNews Admin

JVPயின் வாக்கு வங்கி 75 வீதத்தினால் அதிகரிப்பு - அநுரகுமாரவின் உயிருக்கு அச்சுறுத்தல்? - விஜித ஹேரத் பரபரப்பு



ஜே.வி.பியின் வாக்கு வங்கி 75 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டு மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தி பக்கமே நிற்கின்றனர் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,


” ஜே.வி.பியின் வாக்குவங்கி என்பது வெறும் 3 வீதம் அல்ல. அந்த எண்ணிக்கை தற்போது 75 வீதமாக அதிகரித்துள்ளது. பிரதான கட்சிகளின் ஆதரவாளர்களும், மக்களும் எம்முடனேயே இருக்கின்றனர். அதனால்தான் ஜே.வி.பியின் எழுச்சியை தடுப்பதற்கு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஓர் அங்கமாகவே முட்டைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இவ்வாறான தாக்குதல்கள்மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. முடிந்தால் அரசியல் கொள்கை அடிப்படையில் மோதுமாறு சவால் விடுக்கின்றேன்.


அதேவேளை, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் குண்டர் குழுவை பயன்படுத்திய அரசியல் தரப்பு அதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.


இன்று முட்டை தாக்குதல் நடத்தியவர்கள், நாளை எதையும் செய்யலாம். எனவே, அநுரவை காக்குமாறு நாட்டு மக்களும் கோரிவருகின்றனர்.” – என்றார் விஜித ஹேரத் எம்.பி.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »