Our Feeds


Monday, March 7, 2022

SHAHNI RAMEES

சோமாலியாவை விட மோசமான மருந்துப் பற்றாக்குறை இலங்கையில் நிலவுகிறது!

 

மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், பிரச்சினையை மறைக்காமல், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மருந்துகளுக்கான மனிதாபிமான உதவியைப் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.

சமீபகால வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடிகள் எத்தியோப்பியா, சோமாலியா, வடகொரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்படவில்லை.

தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்கும் 60 வீதமான களஞ்சியசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ளவை 4 முதல் 6 வாரங்களில் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »