Our Feeds


Tuesday, March 15, 2022

ShortNews

நேட்டோவில் இணையப் போவதில்லை - உக்ரைன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு



நேட்டோவில் இணையப் போவதில்லை என்பதை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (15) தெரிவித்துள்ளார்.


நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்து வந்தார். இதனை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யாவின் முப்படைகளும் கடந்த 20 நாள்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும், மிகப் பெரிய அணு நிலையங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நேட்டோவில் இணையப் போவதில்லை என்ற உண்மையை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக வெளியிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »