Our Feeds


Wednesday, March 16, 2022

ShortNews

பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழில் கைதான பெண்ணின் தகவலில் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்தவரும் சிக்கினார்!



(மயூரன்)


யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில்  நேற்று (15) செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.


பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் பனிப்புலம் – கலட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது குறித்த வீட்டிலிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 36 வயதான பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கையின்போது சங்கானையை சேர்ந்த 27 வயது இளைஞனும், கொலன்னாவயின் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »