பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சி நாடு முழுவதும் நடத்திவரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் கொழும்பு, மருதானையில் PTA சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முஸ்லிம் இடதுசாரி முன்னனி சார்பில் அதன் பொதுச் செயலாளர் பைசல் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த போராட்ட நிகழ்வில் பொது மக்கள் பெருந்திரலாக கலந்து கொண்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், ரிஷாத் பதியுத்தீன், மனோ கணேசன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷரப்தீன் அலி மற்றும் இடதுசாரி தலைவரான விக்ரமபாகு கருணாரட்னவும் இதில் கலந்து கொண்டிருந்ததுடன், பல சிவில் அமைப்புகளும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.