Our Feeds


Thursday, April 21, 2022

ShortTalk

இன்று முதல் நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ; வெளியானது புதிய அறிவிப்பு.

 

முகக்கவசம் தொடர்பான தனது புதிய  முடிவை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.


ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்து இருந்தார்.



ஆனால், பொது போக்குவரத்து மற்றும் உட்புற செயல்பாடுகளின் போது முகமூடிகளை அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.



இந்நிலையில்  அமைச்சரின் முந்தைய அறிவிப்பை மாற்றியமைத்து புதிய அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.  

 


நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பாரிய பொதுக் கூட்டங்களை கருத்தில் கொண்டு முகமூடி அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.



முன்பு நடைமுறையில் இருந்தபடி வெளியில் முககவசங்களை  அணிய வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



புதிய முடிவு இன்று, 21 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வருவதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »