ஜனாதிபதி மற்றும் பிரதமரை விடவும் வேடுவத் தலைவர் வன்னிய அத்தோ சிறந்த தலைவர் என்றே நாட்டு மக்கள் கூறுகின்றனர். ஆகவே, யாராவது ஒருவரை தலைமைத்துவத்துக்கு கொண்டு வந்து நெருக்கடி நிலைமைகளிலிருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோகினி விஜயரத்ன சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) வியாழக்கிழமை இடம்பெற்ற நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.