நாடாளுமன்றத்துக்கு நேற்று வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச சிவப்பு சால்வை அணிந்திருக்கவில்லை.
வழமையாக தேசிய உடை அணிந்து, அதற்கு மேல் சிவப்பு சால்வையை போட்டவாறே சமல் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவார்.
எனினும், நேற்றைய தினம் சிவப்பு சால்வை இன்றியே அவர் வந்திருந்தார். இது தொடர்பில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அவரிடம் வினாக்களை எழுப்பினர்.
ஊடகங்கள் இது தொடர்பில் கேள்வியெழுப்பிய நேரத்தில் “சால்வை தேவையில்லை. ஆடைதான் தேவை” என பதிலளித்தார் ஷமல் ராஜபக்ஷ.
Chamal Rajapaksa goes to parliament without a "Satakaya" #Lka pic.twitter.com/8OsSADGmTr
— Manjula Basnayake (@BasnayakeM) April 5, 2022
