(எம். செல்வராஜா பதுளை நிருபர்)
விஹாரை ஒன்றுக்கு பெற்றோருடன் சென்றிருந்த 16 வயது சிறுவனுடன் சந்தேக நபரான இளைஞர் உயைராடிக் கொண்டிருந்துபோது அந்தச் சிறுவன் கையில் அணிந்திருந்த தங்கக் கைச் சங்கிலியை அபகரித்து விழுங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சிறுவன் தமது பெற்றோரிடம் கூறவே, பெற்றோர் வருமுன்பே சந்தேக நபரான இளைஞன் தப்பியோடியுள்ளான். இது தொடர்பில் சிறுவனும் அவனது பெற்றோரும் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து வினித்தகமை என்ற இடத்தில் சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, தான் அந்தச் சங்கிலியை விழுங்கி விட்டதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரான இளைஞரை பதுளை அரசினர் மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து ‘எக்ஸ்ரே’ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது வயிற்றுக்குள் தங்கச் சங்கிலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.