மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் நிரோஷன் ருவமல் அப்போன்சுவை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோ விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.