நாட்டின் 24வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அவர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று தனது புதிய பதவியில் நாளை பொறுப்பேற்க உள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
2022 ஜூன் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு படைகளின் புதிய பிரதம அதிகாரியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜூன் 01ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2022 மே 31ஆம் திகதி இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.