நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் போராட்டங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வீதிகளில் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
