Our Feeds


Thursday, June 23, 2022

SHAHNI RAMEES

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 106 வர்த்தகர்கள் கைது


 அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 106 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

அரிசிக்காக உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது முதல் அதிகூடிய விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரச் சபை சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளது


அந்த சுற்றிவளைப்புக்கமைய கடந்த சில நாட்களில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது குற்றவாளிகளிடமிருந்து 3 மில்லியன் ரூபாவை அபராதமாக பெற்றுக்கொண்டதாக நுகர்வோர் விவகார அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »