ஜூன் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த இரு நாட்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையிலான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
கல்வியமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த பின்னர், காலை வேளையில் மின்வெட்டை அமுல்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இன்று 2.5 மணி நேரம் மின்சாரம் தடைபடும்.