எரிபொருள் நெருக்கடி காரணமாக, நாளைமுதல், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், எரிபொருளை பெற்றுத்தரக்கோரி நாட்டின் பல பாகங்களிலும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை உள்ளிட்ட பல பகுதிகளில், ஆசிரியர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட படிவத்தினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.