Our Feeds


Monday, June 27, 2022

ShortNews Admin

இன்று 27 முதல் ஜூலை 3 வரை மின் துண்டிப்பு அமுலாகும் விதம் இதுதான் - பட்டியல் இணைப்பு.



மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் காலப்பகுதியினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரையான காலப்பகுதியில் A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு நகர் பகுதிகளில் எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் காலை 6 மணிமுதல், 8 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலயங்கள் மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரம் மின் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »