(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
குற்ற விசாரணைப் பிரிவு கிடைத்த தகவல் ஒன்றிளையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலாhன பொலிஸார் நேற்று மாலை 4 மணிக்கு குறித் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.
இதன் போது பெரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டதுடன் ஒருவரை கைது செய்து சந்திவெளி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
