அம்பாறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களது உறவினர்களது வீடுகளை தீயிட்ட மற்றும் சேதமாக்கிய சம்பவம் தொடர்பாக பெண்கள் மற்றும் நீதிமன்றல் சரணடைந்த இருவர் உட்பட 33 பேர் இதுவரையில் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து அம்பாறையிலுள்ள ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, விமலவீர திஸாநாயக்க மற்றும் அவரது மகனின் வீடு, அம்பறை நகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
இதில் இதுவரை கைது செய்யப்பட்ட 33 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இவர்கள் பிணையில் வெளிவந்துள்ளதுடன் குறித்த சம்பவத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக விலை மதீப்பீட்டு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.