சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
கைதான நபரிடமிருந்து 117,000 கனடா நாட்டு டொலர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, 19,000 யூரோவும் சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.