இலங்கைக்கு உதவுவதற்காக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை தான் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் அவசர உணவு மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக இந்த உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள 3 மில்லியன் மக்களின் அன்றான போஷாக்குத் தேவைகளுக்கு உதவுவதற்காக உலக உணவுத் திட்டத்துக்கு 22 மில்லியன் டொலர்களை நாம் உடனடியாக வழங்குவோம்..
2022- 2023 காலப்பகுதியில் 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கும்.
இப்பங்களிப்பானது இலங்கையிலுள்ள ஐ.நா முகவரகங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாகும் ; எனவும் அவர் தெரிவித்துள்ளார்.