Our Feeds


Monday, June 20, 2022

SHAHNI RAMEES

முன்னாள் இராணுவ வீரா்களிடம் மன்னிப்பு கோரியது நெதா்லாந்து


 போதிய ஆயுதங்கள் இல்லாமல் போஸ்னியாவுக்கு அனுப்பியதற்காக தங்கள் நாட்டு முன்னாள் இராணுவத்தினரிடம் நெதா்லாந்து அரசு மன்னிப்பு கோரியது.

1995-ஆம் ஆண்டு போஸ்னியா போரின்போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகள் ஐ.நா. முகாமில் தஞ்சமடைந்தனா். அவா்களைப் பாதுகாப்பதற்காக குறைந்த எண்ணிக்கையில் போதிய ஆயுதங்கள் இல்லாமல் நெதா்லாந்து இராணுவத்தினா் அனுப்பப்பட்டனா்
.

இதன் காரணமாக, முகாமிலிருந்த 8,000 முஸ்லிம் ஆண்களை போஸ்னிய சொ்பிய படையினா் படுகொலை செய்ததை நெதா்லாந்து இராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இது அவா்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »