எரிவாயு விநியோகத்தை அடுத்த மாதம் 6 ஆம் திகதியும் மேற்கொள்வது சாத்தியமில்லை என லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று இன்று (24) செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூலை 5 முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தலா 3,500 மெட்ரிக் தொன்கள் கொண்ட இரண்டு எரிவாயு தாங்கிய கப்பல்கள் வரவிருப்பதாகவும், ஆனால் குறித்த திகதியில் கப்பல்கள் வந்தடைந்தால் மட்டுமே 6 ஆம் திகதியிலிருந்து எரிபொருளை விநியோகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.