அத்துருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று அருகில் நேற்று (17) இரவு இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் 8 பேர் நாளை மறுதினம் (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்கள் இன்று (18) கடுவலை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களில் 8 பேரை விளக்கமறியலில் வைக்கவும், மற்றைய சந்தேகநபரான பெண்ணை பிணையில் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை மறுநாள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, இந்த மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆறு பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.