காலி முகத்திடலில் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.
சட்ட மா அதிபரின் பணிப்புரையின் பேரிலேயே இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்தாபன சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், முதற்கட்ட விசாரணைகளை விட சிரேஷ்ட அதிகாரி ஒருவரே மேற்கொள்ள வேண்டும் என்றும் செயலாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசாரணைகளை நடத்தி 45 நாட்களுக்குள் தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.