ஐக்கிய மக்கள் சக்தியில் இனி இணைவதற்கு தயாராக இல்லையென, தாம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாங்கள் எதிரி படை அல்லவென தெரிவித்த பாட்டலி எம்.பி, நட்பு சக்தியே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு வாக்களித்த மக்களின் நன்மதிப்பை ஒருபோதும் வீணடிக்கமாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களின் திட்டத்தை பொருளாதார ரீதியாக ஆதரிக்க அரசு தயாராக இருந்தால், அதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அதைவிடுத்து அரசாங்கத்தின் நடவடிக்கை மீது கற்களை வீசுவது தமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.