நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசியல் மற்றும் அரச நிர்வாகம் ஆகிய இரண்டிலும் இதுவரையில் பங்கெடுத்து வந்த தான், இனி எந்தவொரு அரச நிர்வாக பதிவிகளையும் வகிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசியலில் இருந்து திடீரென விலகிச்செல்ல முடியாது எனவும் பெசில் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.
தன்னை தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.