Our Feeds


Wednesday, June 1, 2022

ShortTalk

மே 9 தாக்குதல் தொடர்பில் நேற்றுக் கைதானவர் இன்று உயிரிழந்தார்! - நடந்தது என்ன?




மே – 9  சம்பவம் தொடர்பில் நேற்று (31) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.


கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் மற்றும் ஏனைய வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸில் முன்னிலையாகிய பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதான மொரட்டுவை உஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் நேற்று மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »