Our Feeds


Thursday, June 2, 2022

SHAHNI RAMEES

மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் மஹிந்த கஹந்தகமகே கைது

 

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகே குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் சந்தேக நபராக இவரது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், உடனடியாக கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

அதற்கமைய, குறித்த சந்தேக நபர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »