எரிவாயு நெருக்கடியை தீர்க்க எதிர்காலத்தில் 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த எரிவாயு கொள்வனவு நடவடிக்கைக்காக உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலரும், அரசாங்கத்தின் 20 மில்லியன் டொலரும் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.