Our Feeds


Wednesday, June 1, 2022

ShortTalk

பொருளாதார நெருக்கடி - மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதிலும் பிரச்சினை!



(இராஜதுரை ஹஷான்)


பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை உட்பட ஏனைய மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கான உணவு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் துரிதகரமான செயற்படுத்த வேண்டும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரிடம் மிருகக் காட்சிசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி மனிதர்களுக்கு மாத்திரமல்ல, விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிருகங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மிருகக்காட்சிசாலை நிர்வாகம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று வனஜீவராசிகள் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே இந்த விடயம் சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »