கொழும்பு – முகத்துவாரம் – அளுத்மாவத்தை வீதியை மறித்து மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவை பெற்றுத் தரக் கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள், எரிவாயு சிலிண்டர்களை வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் மேல் மாகாணத்திற்கு லிட்ரோ சமையல் எரிவாயு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.