ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு அமைச்சுக்களில் ஒன்று வர்த்தகர் தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கள் என்பன ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இதில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் பெசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரான நியமிக்கப்படவுள்ளதாகவும் அவருக்க புதிய அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.