நாட்டிற்கு வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் நேற்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வழங்குனர்களால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது
எவ்வாறாயினும், கப்பலின் வருகை மேலும் தாமதமடையும் என பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.