ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் உலக உணவுச் செயற்திட்டம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுன் – செப்டெம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் உலகளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பு நிலை எத்தகையதாகக் காணப்படும் என்பது குறித்து இந்த இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள ‘பட்டினி மேலோங்கல் அபாய அறிக்கையிலேயே’ மேற்கண்டவாறு இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.