கடந்த சில தினங்களுக்கு முன்னர் அட்டுளுகம பிரதேசத்தில்படுகொலை செய்யப்பட்ட 9 வயதான பாத்திமா ஆயிஷாவின் வீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நேற்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து தனது இரங்கலை தெரிவித்தார்.
இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு மறைந்த சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிதியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.