Our Feeds


Saturday, June 18, 2022

SHAHNI RAMEES

வென்னப்புவ கடற்கரையில் கரையொதுங்கிய சிறுவனின் சடலம்


 சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி வத்தளை – ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாயொருவர் பிரதேசவாசிகளால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆற்றில் வீசப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »