Our Feeds


Wednesday, June 22, 2022

ShortNews

எரிபொருள் தேடிச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்



கொடகம நகரில் எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞர் ஒருவர் பாதுக்க துன்னான பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மற்றுமொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் உயிரிழந்தவர் மீகொட, தம்பே குகுலவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய லஹிர ஹஷான் ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சகோதரனும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பாதுக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »