எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை வேளையில் மின்வெட்டை மேற்கொள்வதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இணையம் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் திங்கள்கிழமை (20) முதல் காலை 8.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு வாரங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.