Our Feeds


Sunday, June 19, 2022

SHAHNI RAMEES

ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

 

தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுவதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் தற்போது முடியுமான அளவு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 
இந்தநிலையில் ரயில் சேவைகளை அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுவதோடு கால அளவை குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »