ஹோமாகம - மாகம்மான பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலுக்கு கலனில் பொற்றோல் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த தீப்பரவல் சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்த தம்பதியினர் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில், ஹோமாகம – ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த தம்பதியினர் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 19 வயதுடைய குறித்த தம்பதியினரின் மகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 6 வயதுடைய மற்றொரு மகள் பொரளை சீமாட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்
குறித்த சம்பவம் தொடர்பில் கஹதுடுவ காவல்துறையினர் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.