Our Feeds


Sunday, June 12, 2022

ShortTalk

சிறையிலடைக்கப்பட வேண்டிய பெசில் சிரித்துக் கொண்டே வெளியேறினார்! -ரதன தேரர் சாடல்!



நாட்டுக்கு இழைத்த குற்றத்துக்காக முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவை சிறையிலடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குடும்ப அரசியலை முன்னின்று வழிநடத்தியவர் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான விடயங்களைச் செய்த ஒருவரால் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது தமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு சிரித்துக் கொண்டே வீட்டுக்குச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »