சட்டரீதியாக வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இலங்கை தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பணம் அனுப்புவதற்காக சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்தும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றார்.
வாகன இறக்குமதி அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் நாணயக்கார, வங்கி வழிமுறைகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு நாணயங்களை அனுப்பும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே இவ்வாறு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களை சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என் குறிப்பிட்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.