அரச நிறுவனங்களின் தலைவர்களை முன்னறிவிப்பின்றி நீக்க வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இது தொடர்பில்ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.
அரச நிறுவனமொன்றின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாராயின், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.