இன்று (04) மாலை அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாஞ்சாலிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே குறித்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞர் சில தினங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் போதைப்பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் தற்போது வலான பைிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சமபவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஷால் தல்துவ தெரிவி்த்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.